தேனி மாவட்டத்தில் – புன்னகை சில்க்ஸ் 2ம் ஆண்டு திறப்பு விழா

தேனி   – தேனி  மாவட்டம் பெரியகுளம் தென்கரை வைகை அணை ரோட்டில் அமைந்துள்ள புன்னகை சில்க்ஸ் 2ம் ஆண்டு திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பி .பாலுசாமி ,AC .சிவபாலு ,வெங்கடேஷ் கோனார் ,அன்புக்கரசன் ,நல்நூலகர் சவுடமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஊக்குவித்தனர் .முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது .நிர்வாக இயக்குனர்கள் முகமது இப்ரான் ,ஜே முகமது அராஃபத் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு  வழங்கினர் .இக்கடையில் பணிபுரியும் ஆண் ,பெண் அனைத்து ஊழியர்களுக்கும் மேலாளர்களுக்கும் ஷீல்டு வழங்கி நினைவு பொருள் வழங்கப்பட்டது .முன்னாள் தம்பீஸ் உரிமையாளர் அனைவரையும் வரவேற்று அனைத்து  உள்ளங்களுக்கும் நன்றியுரையாற்றினார் .

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை புன்னகை சில்க்ஸ் உரிமையாளர்கள் மிக சிறப்பாகவும் செய்திருந்தனர் .இவ்விழா நிகழ்ச்சி தொகுப்பினை அனைவரும் பாராட்டும்படி R. லாவண்யா தொகுத்து வழங்கினார் .இவரது பேச்சு அனைவரையும் உற்சாகப்படுத்தியது .கடையில் பணிபுரியும் அனைவர்க்கும் (வ உ சி பற்றி சிறுவன் பேச்சு அனைவரையும் உற்சாகப்படுத்தியது. அச்சிறுவனுக்கு புன்னகை சில்க்சின் நிறுவனர் சார்பாக ரொக்க பரிசு வழங்கப்பட்டது ) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவர்க்கும் உணவு வழங்கப்பட்டது. முகக்கவசம், கிருமி நாசினி ,சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »