ஆன் லைன் லாட்டரி ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு

விக்கிரவாண்டி –

விக்கிரவாண்டி அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்து செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் எஸ்.பி., ஸ்ரீநாதாவிற்கு வந்த ரகசிய தகவலை அடுத்து விக்கிரவாண்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் பனையபுரம் தனியார் திருமண மண்டபத்தின் பின்புறம் திடீர் சோதனை நடத்தினர் . அப்போது அங்கு செல்போன் மூலம் மக்களை ஏமாற்றும் வகையில்  ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து செல்போன் , பைக் மற்றும் ரொக்க பணம் ரூபாய் 400 ஐ பறிமுதல் செய்தனர் . மேலும் தலைமறைவாகிய விழுப்புரம் மருதுாரை சேர்ந்த மணவாளன் (44) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »