சிறுபாக்கம் கிராமத்தில் கிணற்றில் விழுந்து முதியவர் சாவு

வேப்பூர் – கடலூர் மாவட்டம் வேப்பூர்  அருகிலுள்ள  சிறுபாக்கம் கிராமம், எஸ்,புதூர் சாலையில்   ஆண்டவர் கோயில் அருகில் வசித்து வருபவர் மொட்டையன் மகன்  பெரியசாமி (வயது 75) இவருக்கு சொந்தமான மோட்டார் கிணறுக்கு குளிக்கச் சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டார்
இதுபற்றி தகவல் அறிந்த சிறுப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேப்பூர் தீயணைப்பு துறை உதவியுடன் விரைந்து சென்று கிணற்றிலிருந்து பிரேதத்தை கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »