தமிழக அரசின் உத்தரவின்படி நோய்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நேற்று முதல் 9 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி வகுப்புகள் துவங்கின.

கன்னியாகுமரி – இன்றைய தினம் மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின்படி  நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நோய் தடுப்பு விதிமுறைகள் மாநகர் நலஅலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.

மேலும் கல்லூரிகளில் மாணவிகள் மற்றும் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு நடைபெற்று வரும் சிறப்பு தடுப்பூசி முகாமை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

பொது மக்கள் சமூக நலனை கருத்தில் கொண்டு பொது இடங்களுக்கு செல்லும் பொழுது முகக் கவசங்கள் அணிவதையும் சமூக இடைவெளியை கடை பிடிப்பதையும் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »