புளியந்தோப்பு பகுதியில் முன் விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் தாக்கிய சரித்திரப் பதிவேடு குற்றவாளி கைது.

சென்னை,பட்டாளம், K.M.கார்டன், 13வது தெரு, எண்.10 என்ற முகவரியில் விக்னேஷ், வ/23,த/பெ. வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். விக்னேஷ் மதியம் தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சிங்கம் (எ) கதிரவன் முன் விரோதம் காரணமாக மேற்படி விக்னேஷிடம் தகராறில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வாய்தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த சிங்கம் (எ) கதிரவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேற்படி விக்னேஷை கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். ரத்த காயமடைந்த விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இது குறித்து P-1 புளியந்தோப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 P-1 புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட சிங்கம் (எ) கதிரவன், வ/23, த/பெ.ராஜா, எண்.55,  8வது தெரு, கே.எம்.கார்டன், பட்டாளம், சென்னை என்பவரை கைது செய்தனர். அ.அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சிங்கம் (எ) கதிரவன்P-1 புளியந்தோப்பு காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே 9 வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சிங்கம் (எ) கதிரவன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »