ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெண்கள் பாத்ரூமில் செல்போன் மூலம் வீடியோ எடுத்த தற்காலிக ஊழியர் கைது. 1 செல்போன் பறிமுதல்

சென்னை, ராமாபுரம் பகுதியில் தனியார் கார் சர்வீஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. காலை, மேற்படி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் அங்குள்ள பெண்கள் பாத்ரூமிற்கு சென்ற போது, சத்தம் கேட்டு பார்த்த போது, பக்கத்து பாத்ரூமிலிருந்து யாரோ செல்போனில் வீடியோ எடுப்பது தெரிய வந்தது. உடனே, அந்த பெண் ஊழியர் சத்தம் போடவே, சத்தம் கேட்டு ஊழியர்கள் ஓடிவந்து, பக்கத்து பாத்ரூமிலிருந்து தப்பியோட முயன்ற அந்நிறுவனத்தின் ஊழியரை பிடித்து, செல்போனை பறித்துக் கொண்டு, R-11 ராமாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

R-11 ராமாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் தமிழரசன் (எ) ஆகாஷ், வ/23, த/பெ.கோட்டீஸ்வரன், பஜனை கோயில் தெரு, மேல் மாநகர், பூந்தமல்லி என்பதும், தமிழரசன் மேற்படி நிறுவனத்தில் சுமார் 4 மாதங்களாக தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருவதும், சம்பவத்தன்று மேற்படி நிறுவனத்தில் உள்ள பாத்ரூமில் இருந்து கொண்டு பக்கத்து பாத்ரூமில் அவரது செல்போன் மூலம் வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது.

அதன் பேரில், மேற்படி சம்பவம் குறித்து, அந்நிறுவனத்தின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், R-11 ராமாபுரம் காவல் நிலையத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, எதிரி தமிழரசன் (எ) ஆகாஷ் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.       

கைது செய்யப்பட்ட எதிரி தமிழரசன் (எ) ஆகாஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »