பெருங்குடி பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது. 3 செல்போன்கள் பறிமுதல், 3 பெண்கள் மீட்பு

விபச்சார தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று முன்தினம் (16.02.2023) பெருங்குடி, எம்.ஜி.ஆர்மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ரகசியமாக கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி தனியார் தங்கும் விடுதியில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 1.குட்டி (எ) கண்ணப்பன், வ/24, த/பெ. ஆறுமுகம், எண்.203/7, மலைக்கோட்டை, சுத்துவார்பட்டி திண்டுக்கல் மாவட்டம் 2.ஜமால் முகமது(எ) அஜ்மல்கான், வ/36, த/பெ.அப்துல்நாசர், எண்.42/65, தெற்கு தெரு, தென்கரை, தேனிமாவட்டம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள 3 குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்,

கைது செய்யப்பட்ட மேற்படி 2 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 3 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »