மடிப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது. 4.1 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக புனித தோமையர் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW-St.Thomas Mount) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் மடிப்பாக்கம், MRTS ரோட்டில் கண்காணித்த போது, அங்கு ஒருவர் சட்ட விரோதமாக கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. 

அதன் பேரில்,மேற்படி இடத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நவீன்குமார், வ/28, த/பெ.ரவி, எண்.1/39, சுப்புராயன் 4வது தெரு, ஓட்டேரி, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4.1 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட நவீன்குமார் மீது ஏற்கனவே 2 வழிப்பறி வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட எதிரி நவீன்குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »