தண்டையார் பேட்டை பகுதியில் தெலுங்கானாவிலிருந்து Hashish (கஞ்சா எண்ணெய்) கடத்தி வந்த நபர் கைது. 2 கிலோ Hashish (கஞ்சா எண்ணெய்) பறிமுதல்.

வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW-Washermenpet) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் மதியம் தண்டையார் பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே கண்காணித்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரிடம் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின் பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, Hashish எனப்படும் கஞ்சா எண்ணெய் மறைத்து வைத்திருந்ததும் கஞ்சா எண்ணெய்யை தெலுங்கானா மாநிலத்திலிருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

அதன்பேரில், சட்ட விரோதமாக Hashish எனப்படும் கஞ்சா எண்ணெய்யை கடத்தி வந்த ராஜு, வ/35, த/பெ.ஆனந்தய்யா, ஹைதராபாத், தெலுங்கானா மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ Hashish எனப்படும் கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் ஜெல் போன்ற நிலையில் இருக்கும் கஞ்சா எண்ணெய் எனப்படும் Hashish கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படுவதும், எதிரி ராஜு மேற்படி Hashishஐ தெலுங்கானவில் வாங்கி இரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட எதிரி ராஜு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »