பிராட்வே பகுதியில் கஞ்சா வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த நபர் கைது. 6.2 கிலோ கஞ்சா, செல்போன் மற்றும் ரொக்கம் ரூ.300/-பறிமுதல்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, பூக்கடை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/ Flower Bazaar) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (06.02.2023) காலை பிராட்வே, பிரகாசம் சாலை, ஹயாத் மஹால் அருகே கண்காணித்த போது, அங்கு நின்றிருந்த ஒரு நபரிடம் விசாரணை செய்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின் பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அதன் பேரில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த முகமது அன்சப், வ/21, த/பெ. அஷ்ரப், ஏழுகண்டி தெரு, கினலூர் அஞ்சல், கோழிக்கோடு, கேரளா என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6.2 கிலோ கஞ்சா, 1 செல்போன் மற்றும் ரொக்கம் ரூ.300/- பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட எதிரி முகமது அன்சப் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »