வடபழனி பகுதியில் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 25 நபர்கள் கைது. பணம் ரூ.16,950/-மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல்.

சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவிட்டதின் பேரில், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக,R-8 வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் மாலை, வடபழனி, சம்பூர்ணம் அவென்யுவில் உள்ள ஒரு கட்டிடத்தில் ரகசியமாக கண்காணித்த போது, அங்கு சிலர் பணம் பந்தயம் வைத்து சீட்டுகட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதன் பேரில் மேற்படி இடத்தில் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 1.முருகன், வ/51, த/பெ.ஜோதிலிங்கம், ராஜேஸ்வரி தெரு, சூளைமேடு, 2.ராஜகோபாலன், வ/63, த/பெ.சீனிவாசன், திருமங்கலம், 3.தமிழ்செல்வன், வ/54, த/பெ.ஜெயராமன், வ.உசி. தெரு, பம்மல், சென்னை, 4.அறிவழகன், வ/32, த/பெ. திருமணி, சென்னை உட்பட 25 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ.16,950/-மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாகR-8 வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 25 நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய ஒரு நபரை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »