மதுரவாயல் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 நபர்கள் கைது.

சென்னை, போரூர், லட்சுமிநகர், மூர்த்தி அவென்யூ பகுதியில் ஈஸ்வர், வ/25, த/பெ. சங்கர், என்பவர் வசித்து வருகிறார். ஈஸ்வர் கடந்த 27.12.2022 அன்று மாலை மதுரவாயல், ஶ்ரீதேவிநகர், 9வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சூர்யா, கார்த்திக் உட்பட சில நபர்கள், மேற்படி ஈஸ்வரனை ஆபாசமாக பேசி, கை மற்றும் பீர் பாட்டிலால் தாக்கி விட்டு, தப்பிச் சென்றனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேற்படி சம்பவம் குறித்து ஈஸ்வர் நேற்று T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

T-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.சூர்யா, வ/19, த/பெ. ஆறுமுகம், புதிய சுப்பிரமணிய நகர், மதுரவாயல், சென்னை, 2.கார்த்திக், வ/19, த/பெ.ரமேஷ், ஶ்ரீதேவிநகர், 8வது தெரு, ஆலப்பாக்கம், சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் புகார்தாரர் ஈஸ்வர் என்பவருக்கும் சந்தோஷ் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்து வரும் நிலையில்,  ஈஸ்வரை சம்பவயிடத்திற்கு வரவழைத்து, சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யா, கார்த்திக் உட்பட சில நபர்கள் ஆபாசமாக பேசி, கை மற்றும் பீர் பாட்டிலால் தாக்கியது தெரிய வந்தது. மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு தலை மறைவாக உள்ள 3 நபர்களை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சூர்யா மற்றும் கார்த்திக்கிய இருவரும் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »