அண்ணாசாலை பகுதியில் வாலிபரை கல்லால் தாக்கிய சரித்திரப் பதிவேடு குற்றவாளி கைது.

சென்னை, மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், முதல் மெயின் ரோடு, எண்.45/2 என்ற முகவரியில் வசித்து வரும் பாபு, வ/24, த/பெ. வரதன் என்பவர் அண்ணாசாலை, மிர்சா ஹைதர் அலிகான் தெருவில் உள்ள குப்பன் என்பவருக்கு சொந்தமான கிராபிக்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். பாபு நேற்று மதியம் சுமார் 1.00 மணியளவில் கடையிலிருந்த போது, அங்கு வந்த கடையின் உரிமையாளர் குப்பன் என்பவரின் உறவினர் விஜய் (எ) மொட்டை விஜய், மேற்படி குப்பனிடம் சொத்து சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்து போது தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே கடையில் வேலை செய்து வரும் பாபு இருவரையும் சாமதானம் செய்த போது, விஜய் (எ) மொட்டை விஜய் ஆத்திரத்தில் அருகில் கிடந்த கல்லை எடுத்து பாபுவை தாக்கியுள்ளார். தாக்குதலில் இரத்த காயமடைந்த பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இது குறித்து D-2 அண்ணாசாலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

D-2 அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட விஜய் (எ) மொட்டைவிஜய், வ/29, த/பெ.ரவி, எண்.27,டாக்டர் நடேசன் நகர், ஐஸ்ஹவுஸ், சென்னை, என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட விஜய் (எ) மொட்டைவிஜய் D-3 ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே 1 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு உட்பட 9 வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட விஜய் (எ) மொட்டை விஜய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »