வருஷநாடு பகுதியில் இயக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் எங்கே? பொது மக்கள் கேள்வி?

வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு பகுதியை மையமாக வைத்து சுற்றியுள்ள அனைத்து ஊராட்சிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. கிராமங்களிலிருந்து வரும் அனைத்து நோயாளிகளும் கர்ப்பிணிப் பெண்களும் வருஷநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக தேனி அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டு முன்பு வரை வருஷநாடு மையமாக வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்த இடம் இல்லாத காரணத்தினாலும் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் தங்குவதற்கு இடம் இல்லை என்று கூறி ஆம்புலன்ஸ் வெளியூர்களில் நிறுத்தப்படுகிறது. இதனால் வாகன விபத்து மற்றும் கர்ப்பிணி பெண்கள் திடீரென்று ஏற்படும் நோய்கள் சண்டையில் ஏற்படும் காயங்கள் என அனைத்திற்கும் பேருதவியாக இருந்தது இந்த ஆம்புலன்ஸ் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும் ஆம்புலன்ஸ் வர கால தாமதமாய் கின்ற காரணத்தினால்  தனியார் வாகனம் மூலம் சென்று வருகின்றனர். பண விரையம் ஒருபுறம் இருந்தாலும் முதல் உதவி செய்வதற்கு தனியார் வாகனத்தில் முதலுதவி மற்றும் ஆக்ஸிஜன் வசதியில்லை ஆகவே கர்ப்பிணி பெண்கள் மற்றும் அனைத்து நோயாளிகளின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே இப்பகுதிக்கு இயக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை இயக்கவும், ஆம்புலன்ஸ் நிறுத்திட இடவசதி மற்றும் தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுக்க வருஷநாடு ஊராட்சி உதவி செய்திட வேண்டுமென இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »