எழும்பூர் அருகே வாலிபரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் 4 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது.

சென்னை, ஆயிரம் விளக்கு, சுதந்திராநகர், B பிளாக் பகுதியில் வசித்து வந்த மோகா (எ) மோகன், வ/23, த/பெ.பழனிச்சாமி என்பவர் கடந்த 05.06.2022 அன்று நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில், புதுப்பேட்டை, ஐயாசாமிதெரு, குடிசைப்பகுதி அருகே நின்று கொண்டிருந்த போது, சிறிது நேரத்தில் சுமார் 6 நபர்கள் மோகனை வழிமறித்து, கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பினர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த F-2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேற்படி சம்பவம் குறித்து கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

       F-2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 1.விக்ரம், வ/20, த/பெ.சுரேஷ், எண்.99, ஐயாசாமிதெரு, புதுப்பேட்டை, சென்னை, 2.விக்னேஷ், வ/21, த/பெ.அன்பு, எண்.59, ஐயாசாமிதெரு, புதுப்பேட்டை, இவரது சகோதரர் 3.வெங்கடேஷ் (எ) யூடியூப், வ/20, த/பெ.அன்பு, 4.வசீகரன், வ/20, த/பெ.ரஜினி, ஐயாசாமிதெரு, புதுப்பேட்டை ஆகிய 4 நபர்களை கைதுசெய்தனர். மேலும், மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது இளஞ்சிறார் பிடிபட்டார். விசாரணையில் முன் விரோதம் காரணமாக மேற்படி கொலை சம்பவம் நடைபெற்றது தெரிய வந்தது.

மேலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5.நரேஷ், வ/27, த/பெ.ராஜேந்திரன், எண்.79, அய்யாசாமிதெரு, புதுபேட்டை, சென்னை என்பவரையும் கைது செய்தனர். எதிரிகளிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 4 கத்திகள், 2 இரும்பு ராடுகள் மற்றும் 2 இரு சக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 5 நபர்கள் நீதிமன்றத்திலும், பிடிபட்ட இளஞ்சிறார், சிறுவர் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி  5 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இளஞ்சிறார் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »