ஜெ.ஜெ.நகர் பகுதியில் செல்போன் பறித்த பழைய குற்றவாளி உட்பட 2 நபர்கள் கைது

சென்னை, முகப்பேர் கிழக்கு, வளையாபதி சாலை,முதல் பிளாக், எண்.1/676, என்ற முகவரியில் வசித்து வரும் வைத்தியநாதன், வ/22, த/பெ.முருகன் என்பவர் நேற்று (01.03.2022) இரவு 7.30 மணியளவில் வீரமாமுனிவர் சாலையில் உள்ள பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த 4 நபர்கள் மேற்படி வைத்தியநாதனை மிரட்டியுள்ளனர். மேலும் அவரை கையால் தாக்கி பாக்கெட்டிலில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு 4 நபர்களும் தப்பியுள்ளனர். இது குறித்து வைத்தியநாதன் V-3 ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. 

V-3 ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 1.பாரதி தாசன் (எ) சைக்கோபாரதி,  வ/22, த/பெ.ராமமூர்த்தி, எண்.12/12, கோவில்தெரு, பாடிபுதுநகர், திருமங்கலம், சென்னை2.சஞ்சய், வ/19, த/பெ.ஞானசேகரன், எண்.83/31, பெரியார்நகர், பாடிகுப்பம்ரோடு, அண்ணாநகர் மேற்கு, வில்லிவாக்கம், சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட பாராதிதாசன் (எ) சைக்கோ பாராதி மீதுஏற்கனவே 2 வழிப்பறி வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகியுள்ள  2 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »