முகநூல் மூலம் அறிமுகமான கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று கட்டாய திருமணம் செய்து வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொண்ட நபர் போக்சோ சட்டத்தில் கைது…

சென்னை, கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி கடந்த 24.11.2021 அன்று காலை பள்ளிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லையென சிறுமியின் தாயார் கொடுத்த புகார் மீது சிறுமி காணவில்லை பிரிவில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்யப்பட்டு, சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், சிறுமி வெளியூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், காவல் குழுவினர் வெளியூர் சென்று, சிறுமியை மீட்டு, அவரை அழைத்துச் சென்ற சந்தோஷ், வ/22 என்பவரை பிடித்து, இருவரையும், சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் பிடிபட்ட சந்தோஷ் என்ற நபர் முகநூல் மூலம் மேற்படி 16 வயது சிறுமி அறிமுகமாகியதும், பின்னர் சந்தோஷ் மேற்படி சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை அழைத்துச் சென்று வெளியூரில் வைத்து கட்டாய திருமணம் செய்து, வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொண்டதும் தெரிய வந்தது.

அதன் பேரில், இவ்வழக்கு W-4 கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, சிறுமி காணவில்லை பிரிவில் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கு போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டு, எதிரி சந்தோஷ், வ/22, த/பெ.தேவிலால், சித்தூர், ஆந்திரமாநிலம் என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட எதிரி சந்தோஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »