அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 6 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட 55 வயது நபர் போக்சோ சட்டத்தில் கைது.

சென்னை, அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 6 வயது சிறுமியிடம் குமார் என்ற நபர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக சிறுமியின் தந்தை W-8 திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

W-8 திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றம் சாட்டப்பட்ட குமார் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், குமார் மேற்படி 6 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதும், அப்பொழுது சிறுமி அழுது கொண்டு சத்தம் போடவே, குமார் அந்த சிறுமியை மிரட்டி அவரது வீட்டு வாசலில் விட்டுச் சென்றதும் தெரிய வந்தது.

அதன்பேரில், W-8 திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, எதிரிகுமார், வ/55, த/பெ.ராமசாமி, திருமங்கலம், சென்னை என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட எதிரிகுமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »