ராஜமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக நண்பர்களுடன் சேர்ந்து 4 நபர்களை தாக்கிய நால்வர் கைது..

சென்னை, கொளத்தூர், எம்,ஜி.ஆர்.நகர், கங்கையம்மன் கோயில் தெருவில் சூர்யா, வ/19, த/பெ. முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், சூர்யா, நேற்று இரவு சுமார் 09.00 மணியளவில் அவரது வீட்டினருகே சித்தப்பா மாரிகண்ணன், வ/44 என்பவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த ஹரிஹரன் சூர்யாவிடம் தகராறு செய்து 4 நபர்களும் சூர்யாவை தாக்கினர்.

அப்பொழுது அவர்களை தடுக்க முயன்ற மாரிகண்ணன், சூர்யாவின் அண்ணன் விக்னேஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோரையும் கல் மற்றும் கட்டையால்தாக்கிவிட்டு, ஹரிஹரன் அவரது நண்பர்களுடன் தப்பிச்சென்றார். இரத்தக் காயமடைந்த சூர்யா உட்பட நால்வரையும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சூர்யா கொடுத்த புகாரின் பேரில், V-4 ராஜமங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

V-4 ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 1.ஹரிஹரன், வ/21, த/பெ. ராஜேஷ்கண்ணா, வரலஷ்மிநகர் 3வது தெரு, கொளத்தூர், சென்னை, 2.ராகுல், வ/21, த/பெ. ராஜேஷ், டீக்காரம் தோட்டம், பாரதியார் தெரு, கொளத்தூர், சென்னை, 3.மணிகண்டன், வ/21, த/பெ.அண்ணாமலை, பஜனைகோயில்தெரு, கொளத்தூர், சென்னை, 4.ஜீவா (எ) ஈரல், வ/21, த/பெ.மணி, சிவசக்திநகர் 1வது தெரு, கொளத்தூர், சென்னைஆகிய    4 நபர்களை கைது செய்தனர். விசாரணையில், ஹரிஹரன் மீது ஒரு அடிதடி வழக்கு உள்ளதும், ஜீவா மீது 1 வழிப்பறி வழக்கு மற்றும் 1 அடிதடி வழக்கு உள்ளதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் எதிரிகள் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »