குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த மூதாட்டிக்கு டிக்கெட் கேன்வாசர் மருத்துவ உதவி…

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 70 வயது ஆதரவற்ற மூதாட்டி கடந்த பத்து வருடங்களாக வசித்து வருகிறார். இவர் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் இப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இது குறித்து அஞ்சுகிராமம் பேருந்து நிலைய டிக்கெட் கேன்வாசர் முத்துகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அவர் அந்த உதவி செய்யும் நோக்கத்தோடு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு வந்த 108 ஆம்புலன்சில் அந்த மூதாட்டியை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

ஆதரவற்ற மூதாட்டிக்கு கருணை உள்ளத்தோடு உதவிசெய்த முத்துகிருஷ்ணனை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »