ருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு….

பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியின்  நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு  நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் முனைவர் ப.பிரபாகர், நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.  பழனி நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி போக்குவரத்து விதிகளை கூறி, அதன் அவசியத்தை மாணவர்களுக்கு  எடுத்துரைத்தார்.   வேதியியல் துறைத்தலைவர்  முனைவர் எம்.சி.துரைமாணிக்கம், தமிழ்த்துறை தலைவர் முனைவர் க.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.   நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் க.பழனிச்சாமி, முனைவர் இரா.மனோகரன், முனைவர் கி.கண்ணதாசன்,  தேசிய மாணவர் படையின் அலுவலர் முனைவர் லெப்டினன்ட் கே.பாக்யராஜ் ஆகியோர்   இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »