கள்ளிமந்தையம் ஆதிதிராவிட, அருந்ததியர் மக்களுக்கு பட்டா வழங்க ஒட்டன்சத்திரம் வட்டாட்சியரிடம் மனு..

கள்ளிமந்தையத்தில் உள்ள ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்களுக்கு நீதிமன்ற உத்திரவுப்படி பட்டா வழங்க வேண்டுமென ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி-யிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், தொப்பம்பட்டி ஒன்றியம், கள்ளிமந்தையம் கிராமம், புல எண்: 529/6-ல் 3.5 ஏக்கர் உள்ள நிலத்தில் ஆதிதிராவிடர், அருந்ததியர் உள்ளிட்ட பட்டியலின மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்திய வருவாய்துறை, உடனடியாக பட்டா வழங்க ஆணையிடுமாறு கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்றம் 3-மாத காலகெடுவுக்குள் பட்டா வழங்க வேண்டுமென உத்திரவிட்டதன் பேரில் அதற்கான உத்தரவு நகலை ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமியிடம் வழங்கி நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற கோரி மனுதாரர் தமிழ் புலிகள் கட்சி இளம்புலிகள் மாவட்ட துணைச்செயலாளர் ப.செல்வக்குமார் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கள்ளிமந்தையம் தலித் கே.ராமர், இளம்புலிகள் மாநில செயலாளர் தலித் ராயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் செ.மதுமோகன், ஆதி தமிழர் கட்சி மாவட்ட அமைப்பு செயலாளர் மு.த.ஈஸ்வர வேந்தன், தமிழ் புலிகள் கட்சி இளம்புலிகள் மாவட்ட செயலாளர் கரு. இரணியன், தமிழ் புலிகள் கட்சி ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி செயலாளர் எல்லை. செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »