மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட போடுவார்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர்க்கான தேர்தல்…

மதுரை – மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட போடுவார்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர்க்கான தேர்தல், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி ரவி தலைமையில் தேர்தல் பார்வையாளர் அனிதா முன்னிலையில் நடைபெற்றது.

வார்டு உறுப்பினர்கள் சர்மிளாதேவி, அன்ன கருப்பாயி, காட்டு ராணி, முத்து மாயாக்காள், ஜெயக்கொடி,திவனம்மாள், ஊராட்சி செயலாளர் பிரம்மதேவன், உத்தப்பநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர், துணை ஆய்வாளர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற துணைத் தலைவராக 3-ஆவது வார்டு உறுப்பினர் காட்டுராணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஊராட்சிமன்ற தலைவர் செல்வி ராணி ரவி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »