வருசநாடுகடமலைக்குண்டு ஊராட்சியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்….

வருசநாடு – கடமலை மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் . 18 வயது பூர்த்தி அடைந்த மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துபவர்கள்  தடுப்பூசி செலுத்திக்கொள்ள சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்துக்கொண்டனர்.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி மேற்பார்வையில் நடைபெற்றது. மருத்துவர் சுரேந்தர், சுகாதார ஆய்வாளர் சிவராமன், கிராம சுகாதார செவிலியர் சுதந்திரதேவி, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம், ஊராட்சி செயலாளர் துரைப்பாண்டி ஆகியோர் கொரோனோ தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டனர். தடுப்பூசி பற்றிய விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டது.

ஐந்தாம் கட்ட முகாமை கடந்து இன்று நடைபெற்றது. சிறப்பு மருத்துவ முகாம் மேலும் விடுமுறை நாட்களிலும் மருத்துவ முகாம் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் கிராம செவிலியர்கள் அரசு ஊழியர்கள் காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »