வருசநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் மதங்களைக் கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடிய ஆயுத பூஜை….

வருஷநாடு – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் வருஷநாடு பேருந்து நிலையம் அருகில் உள்ள வைகை ஆட்டோ ஸ்டாண்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் மூன்று மதங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வருடா வருடம் ஆயுத பூஜையை வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு மதங்களை கடந்து அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் ஒற்றுமையுடன் வெகு சிறப்பாக ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த மத ஒற்றுமை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. அனைவரும் இதுபோன்று ஒற்றுமையுடன் செயல்பட்டால் நலம் என அனைத்து தரப்பு மக்களும் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »