வருஷநாடு காவல்துறையினருக்கு தன்னார்வலர்கள் பாராட்டு

வருஷநாடு – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சில்லறை மது விற்பனை நடைபெற்று கொண்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் கடமலைக்குண்டு காவல் ஆய்வாளர் குமரேசன் உத்தரவின் பேரில் வருஷநாடு காவல் சார்பு ஆய்வாளர் அருண்பாண்டி தலைமையில் வருஷநாடு போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர் அப்போது சில்லறை மது விற்பனை செய்தவர்கள் மீது வருஷநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் இப்பகுதியில் சில்லறை மது விற்பனை கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் இப்பகுதிகளில் வருஷநாடு காவல் துறையினர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டால் இதுபோன்ற லாப நோக்கத்துடன் சில்லறை மது விற்பனையை கட்டுப்படுத்த முடியும் என இப்பகுதி தன்னார்வலர்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொண்டு வருஷநாடு காவல்துறையினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »