சிங்கராஜபுரம், ஊராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைகை ஆற்றில் குடி தண்ணீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது…

வருஷநாடு –   சிங்கராஜபுரம், ஊராட்சியில் மழை காலத்தை கருத்தில் கொண்டு இரண்டாவது குடிநீர் கிணற்றிலிருந்து குழாய்களை ஆழ்குழியில்  பதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்று நீரால் அடித்து செல்லாமல் பாதுகாக்கப்படும். மேலும் வைகை ஆற்றில் பல மாதங்களாக பாலத்தில்  அடைத்து கிடந்த இலவம் மரத்தையும் ஜேசிபி எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பணியில் ஈடுபட்ட சிங்கராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகளுக்கு  இப்பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »