வருஷநாடு பெட்ரோல் பங்க் அருகே லாப நோக்குடன் விற்பனை செய்த 129 மதுபாட்டில்கள் பறிமுதல்…

வருஷநாடு – வருஷநாடு பெட்ரோல் பங்க் அருகே காந்தி ஜெயந்தி அன்று லாப நோக்குடன் மதுபானம் விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் எஸ்ஐ அருண் பாண்டி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வைகைநகர்  மாயி மகன் ரமேஷ் என்பவர் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அருண் பாண்டி மற்றும் காவலர்கள் சென்று 129 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு வருஷநாடு காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி ரமேஷ் என்பவர் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »