விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் எஸ்.பி., ஸ்ரீநாதா திடீர் ஆய்வு….

விக்கிரவாண்டி- விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் எஸ்.பி., ஸ்ரீநாதா திடீர் ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கினார்.


விக்கிரவாண்டி டோல்பிளாசாவில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாதா  திடீர் ஆய்வு செய்து , கண்காணிப்பு அறையிலுள்ள காமிராக்களை பார்வையிட்டார். பின்னர் டோல் பிளாசா அதிகாரிகளுடன் கூடுதல் காமிராக்கள் வைத்து போக்குவரத்தை சரி செய்வது குறித்தும் , பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.  டவுன் டி.எஸ்.பி., பழனிசாமி , இன்ஸ்பெக்டர் வினாயக முருகன், தனிப்பிரிவு சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சங்கர வடிவேல்,டோல் பிளாசா திட்ட மேலாளர் முத்து அண்ணாமலை, பி.ஆர்.ஓ., சொர்ணமணி, சீனியர் மேலாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »