தூத்துக்குடி கடற்கரை தூய்மை நாள்… அகற்றப்பட்ட ஒரு டன் கழிவுகள்.. கடலோர காவல்படையின் சிறப்பான செயல்!!!

கன்னியாகுமரி – உலக கடற்கரை தூய்மை நாளில் ஒரு டன் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உலக கடற்கரை தூய்மை நாள் செப்டம்பர் மூன்றாவது சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட கடலோர காவல் படையினர் கடந்த 30 ஆண்டுகளாக கடற்கரையை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வருடமும் சர்வதேச கடற்கரை தூய்மை நாளை முன்னிட்டு தூத்துக்குடி கடலோர காவல்படை பிரிவு டிஐஜி அரவிந்த் சர்மா தலைமையில் 120க்கும் மேற்பட்ட வீரர்கள் கொண்ட குழு புதிய துறைமுக பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 67 பைகளில் சுமார் ஒரு டன் அளவிற்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. இதனால் தூத்துக்குடி கடற்கரை தூய்மையாக காட்சியளிக்கிறது.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »