மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு …

கோவை – கோவை மலுமிச்சம்பட்டி நான்கு  ரோடு சந்திப்பில் பல மாதங்களாக சாக்கடை வடிகால் இல்லாமல் கழிவுநீர் ரோட்டில் வழிந்த வண்ணம் இருந்தன. இதனால் பொதுமக்கள் நடக்க முடியாமல் மிகவும்  சிரமப்பட்டு வந்தனர். இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மலுமிச்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள், துணைத் தலைவர் சதீஷ்குமார், வார்டு உறுப்பினர்கள் கனகராஜ், பரமேஸ்வரி, யுவராஜ், செல்வராஜ், கவிதா, பத்மாவதி மற்றும் ஊராட்சி செயலர் கார்த்திக் உட்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »