வனத்துறையின் கட்டுப்பாட்டால் கூட்டு குடிநீர் இணைப்பு இல்லாத தும்மக்குண்டு ஊராட்சி

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளுக்கு வைகை அணையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து கிராம பொதுமக்கள் குடிநீர் தேவைக்கு பயன்பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆனால் தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட வாலி பாறை, வீரசின்னம்மாள் புரம், வண்டியூர், மணலாற்றுக் குடிசை, கோமாளி குடிசை தண்டிய குளம், காந்திகிராமம், அண்ணா நகர், முத்துநகர், ஓய் அம்பாறை காமராஜபுரம் இந்திரா நகர், பால சுப்பிரமணிய புரம், கவுண்டர் குடிசை, தத்தன்  குடிசை, உறக் குண்டான் போன்ற கிராமங்களும் மலை கிராமங்களில் உள்ளது. இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் பணிக்கு வனத்துறையினர் தடை விதித்ததால் கோடைகாலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும் வனத்துறையினரும் இணைந்து குடிநீர் வாழ்வாதாரத்திற்கு மட்டும் உதவிட இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »