அகஸ்தீஸ்வரம் ஊராட்சிய ஒன்றிய பெருந்தலைவர் திமுகவில் இணைந்துள்ளார்…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் ஒற்றையால் விலை பகுதியை சேர்ந்தவர் அழகேசன். இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இவருக்கு சொந்தமாக 3 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன

இரக்க குணம் உள்ளவர்

அழகேசன் என்பவர் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் இரக்க குணம் கொண்டவர். தனது சொந்த பணத்தில் மற்றவர்களுக்கு உதவுவதே அவரின் நோக்கமாக உள்ளது. இவர் இப்பொழுது திமுகவில் இணைந்துள்ளார். இணைத்துக் கொண்ட அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அழகேசன் மரியாதை நிமிர்த்தமாக மாவட்ட தி மு க செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  என்_சுரேஷ்ராஜன் அவர்களையும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஒன்றிய கழகச் செயலாளருமான என்_தாமரைபாரதி -யும் நேரடியாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் போது பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவூத், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுதன்மணி மற்றும் கழக நிர்வாகிகள். மணிராஜா, அன்பழகன், ஹரிகிருஷ்ண பெருமாள் உட்பட பலர் உடன் இருந்தனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »