“சிவகங்கை பாஜக நிர்வாகி சரமாரியாக வெட்டிக் கொலை”

சிவகங்கை – சிவகங்கையில் பாஜக மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சிவகங்கை, காளவாசல் பகுதியைச் சேர்ந்த முத்துப்பண்டி(48) பாஜக மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவர் மாலை டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மற்றொரு டூவீலரில் 3 நபர்கள் அவரை விரட்டி வந்தனர். நெல் மண்டித் தெருவில் அவரை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். கழுத்தில் பலத்த காயமடைந்த முத்துப்பாண்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்தார். பின்னர் டூவீலரில் ஏறி தப்பிச் சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்கள் முத்து  பாண்டியை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முத்துப்பாண்டி மீது 3 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே முன் விரோதம் காரணமாக வெட்டி இருக்கலாம் என்ற கோணத்தில் சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »