தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையம் கலெக்டர் ஆய்வு..

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையமாக முண்டியம்பாகத்தில் உள்ள தனியார் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் மோகன் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் திடீர் ஆய்வு செய்து  அடிப்படை வசதிகள் உள்ளதா எனவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியும், தொரவி கிராமத்தில் பதட்டமான ஓட்டு சாவடியையும் ஆய்வு செய்தார் .
மாவட்ட எஸ்.பி., ஸ்ரீ நாதா, துணை கலெக்டர் (பயிற்சி )ரூபினா, ஆர்.டி.ஓ.,அரிதாஸ் , ஊராட்சிகள் திட்ட இயக்குனர் சங்கர் ,உதவி இயக்குனர் ஜோதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெண்ணிலா, நேர்முக உதவியாளர்  சரவணன், தாசில்தார் தமிழ்ச்செல்வி,பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன் , சர்க்கரை ஆலை உதவித் தலைவர் ரமேஷ், வருவாய்த்துறை, ஊரகஉள்ளாட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »