வாணியம்பாடியில் ம ஜ க பிரமுகர் சரமாரி வெட்டி கொலை : 6 பேர் சரண்!

வாணியம்பாடியில்( மஜக)பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகரை சேர்ந்தவர் வசிம் அக்ரம் வயது 42 மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொறுப்பில் இருந்த இவர் வாணியம்பாடி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்த நிலையில் கடந்த இரவு ஜீவா நகர் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு அவ்வழியாக வந்த போது காரில் வந்த மர்ம நபர்கள் வாசிம் அக்ரமை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர்.  இந்தச் சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது இந்த வீடியோ வெளியாகி மிகுந்த பரபரப்பை தற்போது ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனையடுத்து வாணியம்பாடியில் (மஜக) பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த’ பிரவீன் குமார், பஜாஜ் ‘அகஸ்டின், சத்தியசீலன், செல்வகுமார் ,முனீஸ்வரன் ,ஆகிய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்து விடுங்கள். ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 பேர் நீதிபதி ‘பாரதி, முன் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »