கடமலை மயிலை ஒன்றியத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டம்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருசநாடு ஊராட்சியில் தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி சுகாதாரத் துறையினரின் மூலம் தேசிய குடற்புழு நீக்க வார முகாம் 13 9 2021 முதல் 27 9 2021 வரை தினமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனர். 15 9 2021 நேற்று வருஷநாடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் முன்னிலையில் ஒரு வயது குழந்தை முதல் தாய்மார்கள் வரை அவர்களது வயதின் தன்மைக்கு ஏற்றவாறு மாத்திரை அளவை கூட்டி குறைத்து சுகாதார கிராம செவிலியர் செல்வக்கனி வழங்கினார். இம்முகாமில் குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் மாத்திரைகளை பெற்றுச் சென்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »