கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து.

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் ராயக்கோட்டை சாலை(மேம்பாலம் அடியில்)  பகுதியில் இன்று இரு சக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி ஏற்படுத்திய பயங்கர விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து ஏற்பட்ட நேரத்தில்  கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த பகுதியில் போக்குவரத்து  பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »