கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு பாலம் அமைக்கப்படும் அமைச்சர் உறுதி..

கன்னியாகுமரி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியின்போது கன்னியாகுமரி மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர்   என்_சுரேஷ்ராஜன் முயற்சியில் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இணைப்பு கடல்சார் பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து திட்டம் உடனடியாக துவங்க நடவடிக்கை எடுத்துவரும் தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சென்னையில் அவருடைய அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.  கடல்சார் பாலம் வரைபடத்தை அதிகாரிகளிடம் கன்னியாகுமரி  மாவட்ட  செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.சுரேஷ்ராஜன் கேட்டறிந்தார். உடன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் ஒன்றியக்  செயலாளர் என்.தாமரைபாரதி, வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் எம்.மதியழகன்  நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »