விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவன் திடீரென இறந்ததால் பரபரப்பு….

விக்கிரவாண்டி ஒன்றியம் மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினாயகமூர்த்தி,42: விவசாயி ,இவரது மகன் தினேஷ்,17: வா.பகண்டை அரசு மேல்நிலை பள்ளியில் + 2  படித்து வந்தார் . இவர் நேற்று காலை 8.30 மணிக்கு தனது பூந்தோட்டத்தில் பூப்பறித்து விட்டு பள்ளிக்கு புறப்பட்டு வந்தார்.


காலை 9.45 மணியளவில் தினேஷ் உடலெல்லாம்  வேர்த்து கொட்டி, வாயில் நுரை தள்ளியதால் , சக மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தியிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவரை பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் ராஜேஷ் ,ரமேஷ்குமார் ஆகியோர் பைக்கில் ராதாபுரம் அரசு மருத்துவ மனைக்கு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம்  அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் .மாணவனின் கால்கள் இரண்டும் மஞ்சளாக மாறியிருந்தது. மாணவன் மரணம் குறித்து விபரம் பிரேத பரிசோதனையில் தெரிய வரும் டாக்டர்கள் தெரிவித்தனர் . பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென இறந்ததால்  சக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் சோகத்தில் கதறி அழுதனர்.
இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் தந்தை வினாயமூர்த்தி புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன்  வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »