கீழவளவு கிராமத்தில் இரண்டாவது நாளாக ஊராட்சி மன்ற தலைவர் மனோரஞ்சிதம் மகாதேவன் தலைமையில் நடைபெற்ற கொரானா தடுப்பூசி முகாம்!!

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழவளவு கிராமத்தில் இரண்டாவது நாளாக  ஊராட்சி மன்ற தலைவர் மனோரஞ்சிதம் மகாதேவன் தலைமையில் நடைபெற்ற கொரானா தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் வரை  200க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதில் வெள்ளலூர் வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம்சிவனேசன், ஊராட்சி செயலாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அழகர்கோவில் அருகே கள்ளந்திரி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கிராம மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »