தடுப்பூசி முகாமை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி தாலுகாவில் நடந்த மெகா தடுப்பூசி முகாமினை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி தாலுகாவில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. தலைமை செயலகத்திலிருந்து நியமிக்கப்பட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையரும் , சிறப்பு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி  ஜெயகாந்தன் வி.சாலை கிராமத்தில் நடந்த முகாமினை பார்வையிட்டு பொதுமக்களிடம் முகாம் குறித்து கேட்டறிந்தார். மேலும் கிராமத்திலுள்ள பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள கேட்டுக் கொண்டார்.
தாசில்தார் தமிழ்செல்வி, நேர்முக உதவியாளர் தாசில்தார் வேல்முருகன் , பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன்,வருவாய்ஆய்வாளர் சார்லின் மற்றும் சுகாதார துறை, வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் , பணியாளர்கள் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »