விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவியை எம்.எல்.ஏ., புகழேந்தி வழங்கினார் …

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் கடந்த 11 ம் தேதி அன்று தீ விபத்தில் முனியம்மாள் (60), அய்யனார் (32) ஆகியோரது வீடுகள் எரிந்து சாம்பலாகியது. நேற்று காலை  ஆர்.டி.ஓ., அரிதாஸ் தலைமையில்  விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி ஆகியோர் பாப்பனப்பட்டில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு அவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறி அரசு நிவாரண தொகை ரூபாய் 5 ஆயிரம் மற்றும் அரிசி, இலவச வேட்டி சேலை, மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்கினர்.
தாசில்தார் தமிழ்செல்வி, மண்டல துணை தாசில்தார் செல்வமூர்த்தி, பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன், வருவாய் ஆய்வாளர் சார்லின், தி.மு.க., மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ரவி, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன்,மாவட்ட துணை அமைப்பாளர்கள் முரளி,எத்திராசன், ஊராட்சி செயலாளர்கள்  புகழேந்தி, ஜெயபால், கணேசன், சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »