கடமலை மயிலை ஒன்றியத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி!

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர் அதங்கரைபட்டி மயிலாடும்பாறை  செங்குளம் மேலப்பட்டி கொம்புகாரன் புலியூர், மூலக்கடை முத்தாலம் பாறைகாமன் கல்லூர் கோம்பை தொழு குமணன்தொழு முறுக்கோடை சிங்கராஜபுரம் தங்கம்மாள்புரம் தும்மக்குண்டு வருஷநாடு அம்பேத்கர் நகர் ஆகிய கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அனைவருக்கும் 100 சதவீத இலக்கை நிர்ணயித்து முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 18 வயது பூர்த்தி அடைந்த மற்றும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஒரு சில முகாம்களில் போதிய மருந்து கையிருப்பு இல்லாததால் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். இம் மக்களின் நலன் கருதி மீண்டும் இப்பகுதியில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »