விக்கிரவாண்டி அருகே திடீர் தீவிபத்தில் இரு வீடுகள் எரிந்து சாம்பல்..

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரத்தினம் என்பவரது மனைவி முனியம்மாள் (60) கூலித் தொழிலாளி. இவரது மகன் அய்யனார் (32) இருவரும் அருகருகே உள்ள தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர் . நேற்று முன்தினம் இரவு இரு குடும்பத்தினரும் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்து  மீண்டும் இரவு 9 மணியளவில் திரும்பிய போது வீடு தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவி அருகிலிருந்த அய்யனார் வீடும் தீப்பற்றியது.
தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். தீ விபத்தில் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகியது. தீ விபத்து குறித்து விக்கிரவாண்டி வருவாய் துறை அதிகாரிகள், போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர் . முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »