தேனி மாவட்டம் பெரியகுளம் உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகில் விநாயகர் சிலை ஊர்வலம்!!

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளம் உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகில் விநாயகர் சிலை ஊர்வலம் டிராக்டர் வைத்து ஊராட்சிமன்ற குழு துணைத்தலைவர் ராஜபாண்டி தலைமையில் பெரியகுளம் நகர் முக்கிய வீதிவழியாக ஊர்வலம் நடைபெற்றது. அவ்சமயம் புதிய பேருந்து நிலையம் பிள்ளையார் கோவில் பூசாரி சுப்பிரமணி  இறைவனுக்கு படையலிட்டு அங்குள்ள ஆட்டோக்காரர்களுக்கும் பொங்கல் சுண்டல் வழங்கப்பட்டது. ஊர்வலம் வருவதை கண்டு விநாயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. முத்துமாரியம்மன்  கோவில் தெருவில் உள்ள குழந்தைகள்  தள்ளுவண்டியில் பிள்ளையார் சிலை வைத்து ஆர்வத்துடன் வழிபட்டனர். கள்ளர் தெருவில் உள்ள விநாயகர் சிலைக்கு தெரு மக்கள் சார்பாக தேங்காய் வாழைப்பழம் இனிப்பு பொங்கல்,சுண்டல் ஆகியவை படையலிட்டு அனைத்து  பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »