விராதனூர் அருகே சிறிய அளவில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலை பெரிய அளவில் கட்டி மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

மதுரை – மதுரை மாவட்டம் விராதனூர் அருகே கட்ட மண் கோட்டை கிராமத்தில் பழமையான காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சிறிய அளவில் உள்ள இக்கோவிலை பெரிய அளவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த மக்கள் சார்பாக திட்டமிடப்பட்டு விமான கோபுர கலசத்துடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள காமாட்சி அம்மன் கோவில் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக விமர்சியாக நடைபெற்றது. இதில் கொந்தகை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயவேல் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »