அய்யனார் கோவில் பகுதிகளில் கழிப்பறை வசதி கேட்டு பக்தர்கள் கோரிக்கை

வருஷநாடு செப்டம்பர் 10: கடமலை மயிலை ஒன்றியத்தில் தேனி வருசநாடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் கோவில் வெளி மாவட்டங்களில் இருந்தும் கடமலை மயிலை ஒன்றிய பகுதி மக்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற தினமும் சிறப்பு பூஜையுடன் கிடாவெட்டு நிகழ்வுகள் திருமணம் முதல் வசந்த விழா வரை இந்த திருக்கோவிலில் நடைபெறும் இதில் பக்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் நண்பர்கள் அதிகளவில் கலந்து கொள்வர் இவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம் குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் இயற்கை உபாதை க்காக அருகில் உள்ள வைகை ஆறு மற்றும் தேசிய நெடுஞ்சாலை புதர்களை பயன்படுத்தி வருகின்றனர் எனவே பக்தர்களின் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் கழிப்பறை வசதி கட்டித்தர இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »