ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவை நீண்ட கால வங்கிக் காப்பீட்டில் இணைந்துள்ளன..

  • ஆழமான காப்பீட்டு ஊடுருவல் மூலம் ஆரோக்கியமான தேசத்தை வளர்ப்பதற்கான பணியை நோக்கிய மற்றொரு படி.
  • ஸ்டார் ஹெல்த் இதுவரை 34 வங்கிக் கூட்டாளர்களுடன் தங்கள் திட்டங்களை விநியோகிக்க கூட்டு சேர்ந்துள்ளது.

சென்னை, ஜனவரி  2023: இந்தியாவின் முன்னணி உடல்நல காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (PNB) தனது உத்திசார் கார்ப்பரேட் ஏஜென்சி கூட்டாண்மையை நீண்ட காலத்துக்குப் புதுப்பித்தது. இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் இரண்டாவது பெரிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியா முழுவதும் உள்ள அதன் அனைத்து கிளைகளிலும் ஸ்டார் ஹெல்த்-இன் காப்பீட்டு திட்டங்களை தொடர்ந்து விநியோகிக்கும். இந்த நீண்ட கால கூட்டாண்மை, ஸ்டார் ஹெல்த் -இன் வாடிக்கையாளர் சேவை, நன்மதிப்பு மற்றும் சாதனைப் பதிவு ஆகியவற்றின் சான்றாகும்.

இந்த மூலோபாய உடன்படிக்கையின் கீழ், ஸ்டார் ஹெல்த் -இன் வகையில் சிறந்த உடல் நலக் காப்பீட்டுத் திட்டங்கள் வங்கியின் பரந்த விநியோக வலையமைப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 10,000 -க்கும் மேற்பட்ட கிளைகள் மூலம் கிடைக்கும், இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அனைத்து உடல் நலக் காப்பீட்டுத் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வை வழங்குகிறது.

ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் -இன் இணைசெயல் இயக்குநர் பிஜுமேனன், “இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியுடனான எங்கள் கூட்டாண்மையை புதுப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நீண்ட கால கூட்டாண்மை தொழில் துறையில் அரிதானது மற்றும் வாடிக்கையாளர் மையத்தன்மை மற்றும் திட்ட வழங்கல்களுக்கான ஸ்டார் ஹெல்த் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. இந்த மூலோபாய இணைப்பின் மூலம் , PNB -இன் வாடிக்கையாளர்களுக்கு தரமான, நீண்ட கால சுகாதார காப்பீட்டுத் திட்டங்களை வழங்குவதற்கு எங்கள் வரம்பை விரிவுபடுத்த முயற்சிக்கிறோம்.

அதிகரித்து வரும் மருத்துவ பராமரிப்பு செலவுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்த முயற்சி குறிப்பிடத் தக்க சாதனையாக இருக்கும்.” என்று கூறினார்.

இந்த கூட்டாண்மையானது, இந்தியா முழுவதும் காப்பீட்டு ஊடுருவலை மேலும் அதிகரிக்கச் செய்யும். அதே வேளையில் பிராந்தியங்கள் முழுவதும் சுகாதாரக் காப்பீட்டை எளிதாக அணுகுவதற்கு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியாவின் முதல் தனி சுகாதாரக் காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் ஆகிய இருவரையும் செயல்படுத்தும். “ஸ்டார் ஹெல்த் -இல், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சேவை செய்யும் புதுமையான திட்டங்களை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். நாடு முழுவதும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வலுவான இருப்பு மற்றும் ஸ்டார் ஹெல்த் இன் காப்பீட்டு நிபுணத்துவம் ஆகியவை, இன்று சாமானியர்கள் எதிர்கொள்ளும், இப்போது அதிகரித்து வரும் மருத்துவமனைச் செலவுகள் பற்றிய கவலைகளைத் தீர்க்க உதவும்” என்று ஆனந்த்ராய் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »