வேளச்சேரி பகுதியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கசங்கிலி பறித்துச் சென்ற நபர் கைது. 2 சவரன் தங்கச் செயின் பறிமுதல்.

சென்னை, வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகர், 10-வது குறுக்கு தெரு, சாய் கார்டன், எண்.5/3 என்ற முகவரியில் வசித்து வரும் மூதாட்டி மாலதி, வ/66, க/பெ. சுந்தராஜன் என்பவர் கடந்த 26.12.2022 அன்று தனது வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள், மேற்படி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து மூதாட்டி மாலதி J-7 வேளச்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

 J-7 வேளச்சேரி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட கணேஷ், வ/26, த/பெ.ராதாகிருஷ்ணன், எண்.1/10, பாரதி நகர் முதல் தெரு, வில்லிவாக்கம், சென்னை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 2 சவரன் தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகி உள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கணேஷ் ,விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »